தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலம் அடுத்த துறவிக்காடு கிராமத்தில் பங்குனிப்பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். சிலர் மாவிளக்கேற்றியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மதியம் 2 மணிக்குமேல் அம்பாள் மஞ்சள் விளையாட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
படங்கள்: Dasan(DASAN CLICKZ)












No comments:
Write comments